ரயில் தண்டவாளத்தில் இளைஞர் சடலம் மீட்பு
By DIN | Published On : 28th June 2019 07:22 AM | Last Updated : 28th June 2019 07:22 AM | அ+அ அ- |

மார்த்தாண்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை ரயில்வே போலீஸார் மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியிலிருந்து குழித்துறை ரயில் நிலையம் செல்லும் ரயில் தண்டவாளம் பகுதியில், வியாழக்கிழமை பிற்பகல் ரயில் மோதி, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் காணப்பட்டது.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து கொல்லம் சென்ற ரயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த நாகர்கோவில் ரயில்வே போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.