சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் அய்யா வைகுண்டரின் சாட்டு நீட்டோலை குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் பள்ளி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குறுந்தகடு வெளியீட்டு விழாவுக்கு, பால பிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து, குறுந்தகடை வெளியிட, பள்ளி முதல்வர் உஷா ராமன் பெற்றுக்கொண்டார். வி.வளவன், பேராசிரியர் ஆர்.தர்மரஜினி முன்னிலை வகித்தனர். பள்ளி துணை முதல்வர் கங்காமணி மற்றும் சுப்பிரமணியம், ஆஸ்சர்யம், தங்கநாடார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.