மண்டைக்காடு கோயில் திருவிழா: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி அப்பகுதியிலுள்ள டாஸ்மாக்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, குளச்சல் அண்ணா சிலை சமீபம், குளச்சல் டி.பி. ஜங்சன், இரும்பிலி, இரும்பிலி-ரீத்தாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மார்ச் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com