மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, குளச்சல் அண்ணா சிலை சமீபம், குளச்சல் டி.பி. ஜங்சன், இரும்பிலி, இரும்பிலி-ரீத்தாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மார்ச் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.