குமரி மாவட்டம் ஆறுகாணி பழங்குடியினர் குடியிருப்பு அருகே, காட்டெருமை தாக்கியதில் முதியவர் பலத்த காயமடைந்தார்.
ஆறுகாணி முளிமூட்டு காலாவைச் சேர்ந்தவர் வேலாயுதன்காணி (70). இவர், புதன்கிழமை அவரது விளைநிலத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த காட்டெருமை அவரைத் தாக்கியதாம். இதையடுத்து, அவரது அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியிலுள்ளவர்கள் வந்து அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து களியல் வனச்சரக அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.