வெள்ளிசந்தை அருகேயுள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் சிறப்பிடம் பெற்றனர்.
நாகர்கோவில் ஞான வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இப்பள்ளி 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆபிலாஸ், பிளஸ்ஸோ தங்கப்பதக்கமும், அபிஷேக், திவ்விய தர்ஷன், அகிலேஷ் ராஜா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், ராதாகிருஷ்ணன், எபன் ஜெசானியா, நவீன், அனிஸ் மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர் விஜய், 5ஆம் வகுப்பு மாணவர் நந்து, 4ஆம் வகுப்பு மாணவர் கோபாஸ் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் கிருஷ்ணசுவாமி, பள்ளிமுதல்வர் லிஜோமோள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.