களியக்காவிளை அருகே வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை அருகேயுள்ள செம்மான்விளை பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ். இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவருடைய காரை பக்கத்தில் உள்ள பிரதீப்குமார் வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சப்தம் கேட்டு எழுந்த பிரதீப்குமார் வீட்டினர், உடடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து அலோசியஸின் மனைவி அஜி அளித்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, காருக்கு யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா என விசாரித்து வருகின்றனர்.