பளுகல் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

பளுகல் அருகே மூதாட்டியிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை  போலீஸார் தேடி வருகின்றனர்.

பளுகல் அருகே மூதாட்டியிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை  போலீஸார் தேடி வருகின்றனர்.
பளுகல் அருகே பேயோட்டுக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லி (65). இவர், வியாழக்கிழமை மாலையில் அப்பகுதியில்
சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம். 
புகாரின்பேரில், பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com