சாம்பவர்வடகரை மத்தி அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, செங்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜோசப் மிக்கேல் அந்தோணி முன்னிலை வகித்தார். மாணவர், மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காமராஜர் நற்பணி மன்ற பொறுப்பாளர் இசக்கிமுத்து, ஆசிரியர் கனக அருண், பள்ளி மேலாண்மைக்குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.