திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கமர்தீன், வட்டாரப் பொருளாளர் ஜேம்ஸ்ராஜ், நகர காங்கிரஸ் தலைவர் விமல் ஷெர்லின் சிங், நிர்வாகிகள் வினோத் ராய், ஜெனல்ராஜ் வில்சன், ரவி, வேலப்பன், எட்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தொகுதியில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகளாவது மக்கள் பணி செய்து, மக்களின் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்திய உள்ளூர் நபர்களை மட்டுமே கட்சித் தலைமை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.