தமிழ்மொழி பெயர்ப்புக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் குளச்சல் மு.யூசுப்புக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக் கிளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். யூசுப்புக்கு, அமைப்பின் மாநில துணைப்பொதுச்செயலர் அ. லட்சுமிகாந்தன் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், கவிஞர்கள் பிரேம்குமார், தக்கலை ஹலிமா, வரலாற்று ஆய்வாளர் தக்கலை மா.பென்னி ஆகியோர் குளச்சல் மு. யூசுப்பின் படைப்புகள் குறித்துப் பேசினர். அமைப்பின் குமரி மாவட்டச் செயலர் ஜெ.எம் ஹசன், கவிஞர்கள் பொன்மனை வல்சகுமார், ஈ.எம்.எஸ். கலைவாணன், எழுத்தாளர்கள் செல்வராஜ், சப்திகா, இடலாக்குடி ஹசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மாவட்ட பொருளாளர் அருள் மனோ, விடியல் குமரேசன், குமரி எழிலன், ஹூசைன், குளச்சல் சசி, ஆன்றணி ஜோசப், இருதயராஜ், , கவிஞர் அரங்கசாமி, மத்தியாஸ், பெனட்ராஜ், சுஜாமி, டயானா, ராஜேந்திரன், ஏ.எம்.வி.டெல்பின் , முனாப், நஸீர், அசீம், இஸ்மாயில், சுப்ரமணியம், சசிகுமார் வினோத்குமார், ஜோயல், சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எழுத்தாளர் மு. யூசுப் ஏற்புரை ஆற்றினார். கிளைச்செயலர் ஏ.எம். யூசுப் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மிகையிலான் நன்றி கூறினார்.