நாகர்கோவிலில் நகைக்கடையில் தீ விபத்து

நாகர்கோவிலில் நகைக்கடையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. 

நாகர்கோவிலில் நகைக்கடையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. 
நாகர்கோவில் அண்ணாபேருந்து நிலையம் அருகேயுள்ள நகைக்கடையின் முதல் மாடியில் இருந்து அதிகாலையில்  புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணபாபு  தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கடையில் இருந்த மேஜை, இருக்கைகள், பரிசுப்பொருள்கள் என ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள்  எரிந்து சேதமடைந்தன.  உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பல லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் தப்பின. 
மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com