நாகர்கோவிலில் இன்று பிஎஸ்என்எல் மறு இணைப்பு முகாம்

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில் தரைவழி தொலைபேசி மறு இணைப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) நடைபெறுகிறது.

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில் தரைவழி தொலைபேசி மறு இணைப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) நடைபெறுகிறது.
இதுகுறித்து,  நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர்  சஜூகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல். தரைவழி இணைப்புகளிலிருந்து இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேரமும் இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் அளவில்லா அழைப்புகள் பேசும் வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்கெனவே தரைவழி இணைப்புகளைப் பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் மீண்டும் பி.எஸ்.என்.எல். உடன் இணைந்து இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நாகர்கோவில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு மறு இணைப்பு மேளாவை வெள்ளிக்கிழமை காலை 10.30  மணிமுதல் மாலை 5  மணி வரை, நாகர்கோவில் கே.பி.ரோடு மற்றும் மத்தியாஸ்நகர் வாடிக்கையாளர் சேவை மையங்களில் நடத்துகிறது. இதில், அழகப்பபுரம், ஈத்தாமொழி, சாமித்தோப்பு, தெங்கம்புதூர், கோட்டாறு, ராமன்புதூர், வடசேரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கலந்துகொள்ளலாம். 
துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளுக்கு பாக்கித் தொகை இருந்தால், பொருத்தமான சலுகை முறையில் தள்ளுபடி பெற்றுக் கொண்டு, மறு இணைப்பு பெறுவதற்கோ, பாக்கித் தொகையைச் செலுத்தி கணக்கை முடித்து கொள்வதற்கோ வாடிக்கையாளர்கள் இந்த மேளாக்களில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com