கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக லட்சுமணன்(55) போட்டியிடுகிறார்.
இவர் குமரி மாவட்டம் சிறமடம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை சி.பி.இளங்கோ, தாயார் சரஸ்வதி. முதுநிலை பொறியியல் பட்டம் பெற்ற இவர் கல்லூரிகளில் துறைத் தலைவராகவும், முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். ஆரல்வாய்மொழியில் ஒரு சர்வதேச பள்ளியை நடத்தி வருகிறார். இவரது மனைவி மேரி ஷீபா, மகன்கள் ஆகாஷ் இளங்கோ, அபிலாஷ் இளங்கோ. தொடக்கத்தில் மதிமுகவில் இருந்த இவர், அக்கட்சி சார்பில் கடந்த 2001ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.