நாகர்கோவில் அருகே அரசுப் பேருந்து மோதி பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

நாகர்கோவில் அருகே  அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார்.

நாகர்கோவில் அருகே  அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
கீரிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி விமலா (43).  இறச்சகுளம் பகுதியில் வசித்து வரும் தங்கள் உறவினரை  பார்ப்பதற்காக வெள்ளிக்கிழமை காலை தம்பதி  கீரிப்பாறையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றனர். இவர்கள் இறச்சகுளம் சந்திப்பில் வந்த போது நாகர்கோவிலில் இருந்து ஞாலத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து  இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேராக மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  விபத்து குறித்து தகவலறிந்த விஜயகுமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தை சிறை பிடித்து மறியலில்  ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு  வந்த பூதப்பாண்டி  காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் விபத்தில் இறந்த விமலாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com