முளகுமூடு போப் இரண்டாம் ஜான்பால் கல்வியியல் கல்லூரியில் கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் ஜான்பால் தலைமை வகித்தார். துணை முதல்வர் உஷாகுமாரி முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளர் ஜார்ஜ் பொன்னையா விழாவைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக முளகுமூடு வட்டார முதல்வர் அருள்தந்தை மரிய இராஜேந்திரன், பங்கேற்றுப் பேசினார்.
கல்லூரி பொருளாளர் ராயல்ராஜ் வாழ்த்திப் பேசினார். விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. பயிற்சி ஆசிரியைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை பயிற்சியாளர் பௌஸ்டின் திரேசம்மாள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சி ஆசிரியை ஆட்லின் நிஷா வரவேற்றார். பயிற்சி ஆசிரியை அனுஷா ஜோலின் நன்றி கூறினார்.