அமமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

நாகர்கோவில் அடுத்த புத்தேரியில் அமமுக வேட்பாளர் லெட்சுமணனுக்கு ஆதரவு தெரிவித்து  மாற்றுக்கட்சியினர் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனர்.

நாகர்கோவில் அடுத்த புத்தேரியில் அமமுக வேட்பாளர் லெட்சுமணனுக்கு ஆதரவு தெரிவித்து  மாற்றுக்கட்சியினர் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் லெட்சுமணன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். புத்தேரி பகுதியைச் சேர்ந்த, பாபு, ரெஜினி, இசக்கிமுத்து, மகேஷ் உள்ளிட்ட 500 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி  அமமுகவில் இணைந்தனர்.  கட்சியின் குமரி கிழக்கு மாவட்டச் செயலர் பச்சைமால், மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலர் பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலர் ஆறுமுகம்  மாவட்ட அவைத் தலைவர் ஹிமாம் பாதுஷா, நகர செயலர் அக்சயா கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com