நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றிய இளைஞர் கைது

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் 1.25 கிலோ கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் 1.25 கிலோ கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கோட்டாறு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித் திரிந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில், 1.25 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் பறக்கை சாலையைச் சேர்ந்த ராஜகணேஷ் (25) என்பதும், மதுரை பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, நாகர்கோவிலில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜகணேஷை கோட்டாறு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com