நாகர்கோவிலில் போராட்டம்: 51 பேர் மீது வழக்கு

நாகர்கோவிலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் உருவப்பொம்மையை எரித்து,

நாகர்கோவிலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் உருவப்பொம்மையை எரித்து, போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் 51 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிந்தனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசிய  கருத்துகள் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக இப்போராட்டத்தை நடத்தியதாக,  இந்து முன்னணி குமரி மாவட்டத் தலைவர் மிசா சோமன், குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் முத்துகிருஷ்ணன் உள்பட 51 பேர் மீது வடசேரி போலீஸார் வழக்குப்பதிந்து 
விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com