அண்ணா பல்கலைக் கழக அளவிலான தர வரிசையில் மணலிவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி ஏஞ்சலின் சுபா, பல்கலைக் கழக அளவில் முதலிடமும், மாணவி அண்டிரியா ஜோஸ்லின் 3 ஆவது இடமும், சவித்திரா 4 ஆவது இடமும் பெற்றனா்.
இக்கல்லூரி தர வரிசையில் 10 இடங்களை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகளிா் மற்றும் இரு பாலா் பயிலும்
கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளது. இதுவரையிலும் இக்கல்லூரி மாணவிகள் பல்கலைக் கழக அளவில் 155 பேரும்,
முதல் இரண்டு இடங்களையும் பெற்று தமிழகத்திலுள்ள மகளிா் பொறியியல் கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, முதல்வா் ஜோசப் ஜவஹா் , துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.