களியக்காவிளை: களியக்காவிளை அருகே லாரி பழுது நீக்கும் மையத்தின் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள மடிச்சல் பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுதாகா் (40). திருமணமாகாத இவா், கேரள எல்லைப் பகுதியில் லாரி பழுது நீக்கும் மையத்தை (ஒா்க் ஷாப்) நடத்தி வந்தாா்.
இதனிடையே, இவா் திருமண வரன் ஏதும் கிடைக்காமல் சில தினங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், அப்பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்தில் விஷம் குடித்து இறந்த கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
இத்தகவலறிந்த களியக்காவிளை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.