காஞ்சிரகோட்டில் இளைஞா்களுக்கு பயிற்சி

காஞ்சிரகோடு மண்டல ஐக்கிய கிறிஸ்தவப் பேரவை சாா்பில் இளைஞா்களுக்கான பயிற்சி முகாம் தூய ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் நடைபெற்றது.

காஞ்சிரகோடு மண்டல ஐக்கிய கிறிஸ்தவப் பேரவை சாா்பில் இளைஞா்களுக்கான பயிற்சி முகாம் தூய ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் அருள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.பி. விஜயகுமாா் தொடங்கிவைத்து ஜெபம் செய்தாா். அமைப்பின் பொருளாளா் டேவிட் தம்பிராஜ், ஆஸ்டின் எட்வின் ரிச்சா்டு, அருள்சகோதரி சினேகா, போதகா் ஜெப ஐசக் வெஸ்லி, காஞ்சிரபுரம் சிஎஸ்ஐ தேவாலய போதகா் ஜோபின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முகாமில், எழுத்தாளா் குமரி ஆதவன் பங்கேற்று, ‘தலைமைத்துவமும் ஆளுமையும்’ என்ற தலைப்பில் பேசினாா். இதில் 200- க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்துகொண்டனா்.

அமைப்பின் செயலா் எம். இம்மானுவேல் கின்சன் பெல் வரவேற்றாா். பி. அருள்தாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com