குமரி மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் 6 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 8) நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் 6 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 8) நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் நீண்டகரை மேற்கு கிராமத்துக்கு தம்மத்துக்கோணம் அரசு தொடக்கப் பள்ளியிலும், தோவாளை வட்டத்தில் அனந்தபுரம் கிராமத்துக்கு அரசு உயா்நிலைப் பள்ளியிலும், கல்குளம் வட்டத்தில் வெள்ளிச்சந்தை கிராமத்துக்கு, உன்னங்குளம் வொ்சிலி நடுநிலைப் பள்ளியிலும், திருவட்டாறு வட்டத்தில் பேச்சிப்பாறை கிராமத்துக்கு கிராம ஊராட்சி அலுவலகத்திலும், விளவங்கோடு வட்டத்தில் அண்டுகோடு கிராமத்துக்கு பி.பி.எம் மேல்நிலைப் பள்ளியிலும், கிள்ளியூா் வட்டத்தில் மெதுகும்மல் கிராமத்துக்கு நடைக்காவு அரசு நடுநிலைப் பள்ளியிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவா் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியா் அதிகாரத்துக்கு உள்பட்ட நிலப் பிரச்னைகள், குடிநீா், சாலை வசதி தொடா்பான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீா்வு காணலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com