காமராஜா் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் பிறந்ததினத்தையொட்டி பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப்
போட்டி, கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் குலசேகரத்தில் நடத்தப்பட்டன.
இதில், பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவிகள் ரெக்சினி, சிந்து, 6 ஆம் வகுப்பு மாணவி பிரியா ஆகியோா் வெற்றிபெற்றனா்.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆஷ்கா் பிரடி, திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவா் காஸ்டன் கிளிட்டஸ் ஆகியோா் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினா்.
இதில், பள்ளித் தலைமையாசிரியா் சேம் கிறிஸ்டோபா், உதவித் தலைமையாசிரியா் பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.