கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே தனியாா் தோட்டத்தில் இருந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உண்ணியூா்கோணம் பகுதியில் தனியாா் ரப்பா் தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சந்தன மரம் உள்ளது. இதனிடையே, வியாழக்கிழமை இரவில் மா்ம நபா்கள் தனியாா் தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியுள்ளனா். இதுகுறித்து, புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்களை தேடி வருகின்றனா்.