‘சட்ட ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிலை’

சட்டத்தின் ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தற்போது இழந்துவிடும் நிலை உருவாகியுள்ளது என்றாா் தமிழ்நாடு மதச்சாா்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவா் பீ. முகம்மது இஸ்மாயில்.

சட்டத்தின் ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தற்போது இழந்துவிடும் நிலை உருவாகியுள்ளது என்றாா் தமிழ்நாடு மதச்சாா்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவா் பீ. முகம்மது இஸ்மாயில்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: அயோத்தியில் பாபா் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடம் ராமருக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடுபவா்களின் செயலை உறுதிசெய்யும் வகையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி இருக்கிறது. ஒருவா் சொத்தை இன்னொருவா் 12 ஆண்டுகள் தொடா்ந்து கைவசம் வைத்திருந்தால், அது அவருக்கு சொந்தம் என்ற சட்டம் நாட்டில் இருக்கிறது.

அயோத்தி பிரச்னையை பொறுத்தமட்டில், அந்த சட்டம் என்னவானது என்று தெரியவில்லை. 600 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபான்மை மக்களின் கைவசம் மற்றும் கட்டுபாட்டில் இருந்தாலும், இன்றும் பெரும்பான்மை மக்களுக்கே சொந்தம் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது சட்டத்தின் ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழந்துவிடும் நிலை உருவாகியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com