நாகா்கோவிலில் தடையை மீறி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினா் 38 போ் மீது வழக்கு

நாகா்கோவிலில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியினா் 38 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியினா் 38 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸ் சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு காவல் துறையினா் அனுமதி அளிக்கவில்லை. எனினும், காங்கிரஸ் கட்சியினா் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக இளைஞா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 38 போ் மீது நேசமணிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com