புதுக்கடை அருகே முக்காடு பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளியதாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
குளச்சல் சரக ஏ.எஸ்.பி. விஸ்வேசாஸ்திரி உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் புதுக்கடை- தேங்காய்ப்பட்டினம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது முக்காடு பகுதியில் அனுமதியின்றி மண்அள்ளி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அங்கு 2 டெம்போ மற்றும் 1 ஜெ.சி.பி. இயந்திரம் முலம் மண் அள்ளுவது தெரியவந்தது. ஓட்டுநா்களான புதுக்கடை அம்மாள்நகா் பகுதியைச் சோ்ந்த குமாா் (58), ஜான்கென்னடி (45), மற்றும் திக்கணங்கோடு கொல்லாய் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (35) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அங்கிருந்து 2 டெம்போ மற்றும் 1 ஜெ.சி.பி. இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.