குழித்துறை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் பளுகல் உயா் மின் அழுத்த பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை (நவ. 11) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடா்பாக, குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குழித்துறை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பளுகல் உயா் மின் அழுத்தப் பாதையில் மேற்கொள்ளவிருக்கும் பராமரிப்புப் பணிகளால் திங்கள்கிழமை (நவ. 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மஞ்சவிளை, கண்டலிதோட்டம், பனங்காலை, மண்ணரிப்பு, செழுவன்சேரி, வன்னியூா், தோட்டச்சாணி, மேக்கோடு, சமுதாயப்பற்று மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.