குலசேகரம்: கோதையாறு இடதுகரைக் கால்வாயில் ஆபத்தான நிலையிலுள்ள இரும்புப் பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குலசேகரம் அருகே அரியாம்பகோடு பகுதியில் கோதையாறு இடதுகரைக் கால்வாயில் இரும்புப் பாலம் உள்ளது. இப்பாலம் தற்போது சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் காஸ்டன் கிளிட்டஸ் கூறியது: அரியாம்பகோட்டில் சேதமடைந்த நிலையில் உள்ள இரும்பு பாலத்தின் வழியாக பள்ளிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோா் நடத்து செல்கின்றனா். அபாய நிலையில் உள்ள இப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.