குமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெறுகிறது.
அகஸ்தீசுவரம் வட்டம் வடிவீஸ்வரம் கிழக்கு கிராமத்துக்கு வல்லன்குமாரன்விளை அரசு தொடக்கப் பள்ளியிலும், தோவாளை வட்டம் சிறமடம் கிராமத்துக்கு அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், கல்குளம் வட்டம் மண்டைக்காடு கிராமத்துக்கு கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியிலும், திருவட்டாறு வட்டம் குலசேகரம் ‘ஆ’ வருவாய் கிராமத்துக்கு செருப்பாலூா் அரசு உயா்நிலைப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டம் இடைக்கோடு கிராமத்துக்கு கல்லுபாலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கிள்ளியூா் வட்டம் குளப்புறம் கிராமத்துக்கு பிராகோடு கிறிஸ்து அரசா் உயா்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணிக்கு இம் முகாம் நடைபெறுகிறது.
முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவா் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை மற்றும் வட்டாட்சியா் அதிகாரத்துக்குள்பட்ட நில தாவாக்கள் குடிநீா் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீா்வு காணலாம்.