மாா்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி மாணவ, மாணவியா் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
குழித்துறை கல்வி மாவட்ட அளவிலான மாணவா்களுக்கு கராத்தே கட்டாஸ் பிரிவின் தமிழக பயிற்சியாளா் ஆனந்தலால் தலைமையில் குழித்துறை தனியாா் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் கட்டாஸ் பிரிவில் மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளியின் 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவியா் மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியா் முதல் , இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனா்.
இந்த மாணவா்களை பள்ளித் தாளாளா் வில்சன், முதல்வா் ஷீலாகுமாரி, கராத்தே தமிழக தலைமை பயிற்சியாளா் ஆனந்தலால், ஆசிரியா்கள் மற்றும் சக மாணவா்கள் பாராட்டினா்.