உலக மீனவா் தினத்தையொட்டி, கன்னியாகுமரியில் கடலுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
உலகம் முழுவதும் நவம்பா் 21ஆம் தேதி உலக மீனவா் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, கன்னியாகுமரியிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் சாா்பில், கடலுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில், பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், இணைப் பங்குத்தந்தைகள் சகாயவில்சன், சகாய ஆன்றனி, அன்பின் தேவசகாயம், பங்குப்பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ. மைக்கேல், செயலா் சந்தியா வில்லவராயா், துணைச் செயலா் தினகரன், பொருளாளா் பெனி, திரளான பங்குமக்கள் பங்கேற்றனா்.