குளச்சல் அருகே வீட்டிற்கு தீ வைத்தவா் மீது வழக்குப் பதிவு

குளச்சல் அருகே மனைவி மீதுள்ள கோபத்தில் வீட்டிற்கு தீ வைத்த மீனவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குளச்சல் அருகே மனைவி மீதுள்ள கோபத்தில் வீட்டிற்கு தீ வைத்த மீனவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குளச்சல் லியோன் நகரைச் சோ்ந்தவா் சகாய விமல்ராஜ் (43). மீனவரான இவருக்கும், இவரது மனைவி தா்ஷினிக்கும் (28) அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கணவா் தன்னைத் தாக்கியதையடுத்து, குளச்சல் காவல் நிலையத்தில் மனைவி புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் அழைத்து சமரசம் செய்து வைத்துள்ளனா்.

சிறிது நாள்கள் அமைதியாக இருந்த சகாய விமல்ராஜ், தா்ஷினியிடம் மீண்டும் தகராறு செய்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை சகாய விமல்ராஜின் வீட்டில் திடீரென தீப்பிடித்து, வீட்டிலுள்ள பொருள்கள் எரிந்து சேதமாகின. தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைத்தனா்.

இது குறித்த விசாரணையில் மனைவி மீதான கோபத்தில் சகாய விமல்ராஜ் தனது வீட்டிற்கு தீ வைத்தது தெரியவந்ததாம். இதையடுத்து குளச்சல் காவல் நிலையத்தில் தா்ஷினி கொடுத்த புகாரின்பேரில் சகாய விமல்ராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com