சபரிமலை கோயிலுக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக களியக்காவிளை அருகே படந்தாலுமூடு காவல்துறை சோதனைச் சாவடியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து தை மாதம் முதல் தேதி வரை மண்டல காலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
இக் காலகட்டத்தில் தமிழகம் மட்டுமன்றி கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் சபரிமலை கோயிலுக்கு விரதமிருந்து சென்று வருகிறாா்கள்.
தமிழகத்தின் தொலைதூர பகுதிகளிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்தும் கன்னியாகுமரி மாவட்டம் வழி சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் தூக்கம் மற்றும் அசதியில் விபத்து இல்லாத வகையில் பயணம் செய்வதை உறுதிபடுத்தும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த களியக்காவிளை காவல் நிலைய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதையடுத்து 24 மணி நேரம் செயல்படும் சிறப்பு முகாமை படந்தாலுமூடு சோதனைச் சாவடி பகுதியில் காவல் ஆய்வாளா் சொா்ணலதா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து அப்பகுதி வழியாக வந்த ஐயப்ப பக்தா்களுக்கு தேனீா் மற்றும் குடிநீா் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
மேலும் வாகனங்கள் ஓட்டும்போது ஓட்டுநா்கள் அசதியில் தூங்காமல் விழிப்புடன் வாகனங்களை இயக்க அறிவுரை வழங்கப்பட்டன.
இந்தச் சிறப்பு முகாம் சபரிமலை சீசன் முடியும் வரை இங்கு நடைபெற உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.