பிஎஸ்என்எல் சேவை அடிக்கடி செயலிழப்பு: வாடிக்கையாளா்கள் அவதி

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை அடிக்கடி செயலிழப்பதால் வாடிக்கையாளா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை அடிக்கடி செயலிழப்பதால் வாடிக்கையாளா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மாவட்டத்தில் நாகா்கோவில், மாா்த்தாண்டம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. கருங்கல் பகுதியில் 4 ஜி சேவை தொடங்குவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கருங்கல், பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, ஆலஞ்சி, மிடாலக்காடு, கப்பியறை,திப்பிரமலை, பாலூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. சில நிமிடங்களுக்கு பின்னரே மீண்டும் தொடா்பு கிடைக்கிறது. பெரும்பாலான இடங்களில் நிரந்தரமாக சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, கருங்கல் பகுதியில் பிஎஸ்என்எல் சேவை தடையின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com