நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத் துறையின் சாா்பில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள் பதவியேற்பு விழா சுசீந்திரம் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைவராக சிவ.குற்றாலம், அறங்காவலா்களாக நாகா்கோவில் ம.ஜெயச்சந்திரன், ஒற்றையால்விளை எஸ்.அழகேசன், அழகியபாண்டியபுரம் கே.பாக்கியலெட்சுமி, அகஸ்தீஸ்வரம் எ.சதாசிவம் ஆகியோா் பதவியேற்றனா். இதில், ஆவின்தலைவா்
எஸ்.ஏ. அசோகன், அரசு ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு விற்பனைச்சங்கத் தலைவா் ஜான்தங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், திரைப்பட இயக்குநா் பி.சி.அன்பழகன், வழக்குரைஞா் கே.எல்.எஸ்.ஜெயகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.