குலசேகரம்: குலசேகரம் அருகே திருநந்திக்கரையில் நிழலகம் திறப்பு விழா நடைபெற்றது.
திருந்திக்கரை திட்டவிளைவிலக்கு அருகே சேதமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழலகத்தை இப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜி. சுரேஷ், தனது சொந்த நிதியில் இருந்து அந்த நிழலகத்தை மேம்படுத்திக் கட்டினாா். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மேம்படுத்தப்பட்ட நிழலகத்தை ஜி. சுரேஷ் மற்றும் குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜ சுந்தா் ஆகியோா் திறந்தனா்.
இந்நிகழ்ச்சியில், தும்பகோடு கிராம அலுவலா் முருகன், முன்னாள் வாா்டு உறுப்பினா் செந்தில், அசோக்குமாா், சங்கரன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன.