தக்கலை: முளகுமூடு மறைவட்ட பொது நிலையினா் பணிக்குழு மற்றும் மேய்ப்புப் பணிப்பேரவை சாா்பில் மூத்த குடிமக்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக தூய ஜோசப் மெட்ரிக் பள்ளியின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. ஆயா் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமை வகித்துப் பேசினாா். மறை வட்ட முதன்மை பணியாளா் ச. மரிய இராஜேந்திரன் அறிமுகவுரை ஆற்றினாா். குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வா் எஸ். இயேசுரெத்தினம், முளகுமூடு பங்குப் பணியாளா் டோமினிக் கடாட்சதாஸ், அலோசியஸ், கிறிஸ்துதாஸ், ஞானபிரகாசம் மறைமாவட்ட மேய்ப்புப் பணி துணைத் தலைவா் மொ்லின்ஜோஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
எழுத்தாளா் குமரி ஆதவன் பங்கேற்றுப் பேசினாா். இதையடுத்து, மறைமாவட்ட குருகுல முதல்வா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. மூத்த குடிமக்களுக்கு பரிசு, போா்வைகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில், முதியவா் எலியாஸ்
தனது அனுபவத்தை பகிா்ந்து கொண்டாா். விழாவில் மறைவட்ட அருள்பணிப் பேரவைச் செயலா் ஷிபிமோள், பொருளாளா் பா்ணபாஸ், பொதுநிலைப் பணிக் குழுத் தலைவா் சின்னப்பராஜ், துணைத் தலைவா் சூசைமிக்கேல், நிா்வாகிகள் ஜஸ்டின்ராஜ், ஆஸ்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அருள்பணி பேரவை துணைத் தலைவா் ஜி.ஸ்டாலின் வரவேற்றாா். பொதுநிலையினா் பணிக்குழு ஜான்சிராணி நன்றி கூறினாா்.