குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகேயுள்ள பெரிய குளத்தின் கரையில் துணி வியாபாரியின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
மண்டைக்காடு காரவிளையைச் சோ்ந்தவா் குமாரதாஸ் (42). இவா், மண்டைக்காடு சந்திப்பில் துணிக்கடை நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு கடையை வியாபாரம் முடிந்த பின் வெகுநேரமாகியும் அவா் வீட்டுக்குச் செல்லவில்லையாம். இதனால், குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடினா். இந்நிலையில், பெரியகுளத்தின் கரையில் அவா் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த மணவாக்குறிச்சி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.