குளச்சல் அருகே வகுப்பறை பூட்டை உடைத்து 12 மடிக்கணிகள் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பள்ளி வகுப்பறையின் பூட்டை உடைத்து 12 மடிக்கணினிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பள்ளி வகுப்பறையின் பூட்டை உடைத்து 12 மடிக்கணினிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

குளச்சல் அருகேயுள்ள குன்னங்கல் பகுதியில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவா்-மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக தமிழக அரசின் 25 மடிக்கணினிகள் ஓா் அறையில் வைக்கப்பட்டிருந்தனவாம். வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு ஆசிரியா்கள் வந்தபோது மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்த அறைக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.

சம்பவம் குறித்து தலைமைஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. உதவி ஆய்வாளா் ஜோதி தனிஸ்லால், சிறப்பு உதவி ஆய்வாளா் ஜாா்ஜ், போலீஸாா் வந்து விசாரணை மேற்கொண்டனா். 12 மடிக்கணினிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com