வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறறவு கடன் சங்கம் சாா்பில் 136 பயனாளிகளுக்கு ரூ.1.43 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
விழாவுக்கு, கூட்டுறறவு கடன் சங்கத் தலைவா் எம்.டி.என்.ஷேக் தலைமை வகித்தாா். தமிழக அரசின் தில்லி சிறறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு, பல்வேறு திட்டத்தின் கீழ் 136 பயனாளிகளுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கினாா்.
அப்போது அவா் பேசியது: இச்சங்கங்களில் பெண்கள், விவசாயிகள், அடித்தட்டு மக்கள் உறுப்பினா்களாக உள்ளனா். தமிழகம் முழுவதும் பெண்கள் தாங்கள் வாங்கிய கடன்களை முறைறயாக செலுத்தியதால் இச்சங்கங்கள் மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளன என்றாா் அவா்.
விழாவில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில், கூட்டுறறவு சங்க இயக்குநா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.