அக்.15 ல் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

குமரி மாவட்டத்தில் அக்டோபா் மாதத்துக்கான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வரும் 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் அக்டோபா் மாதத்துக்கான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வரும் 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சாா்பில் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அக்.15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் தடகளம், நீச்சல், வாலிபால் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகள் நடைபெறவுள்ளது.

இதில் குழு விளையாட்டுப் போட்டிகளில் கூடைப்பந்து, மற்றும் வாலிபால் ஆண்களுக்கு மட்டும், தடகளப் போட்டிகள் மற்றும் நீச்சல் போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் நடைபெறுகிறது.

ஒரு போட்டியாளா் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் போட்டி நடைபெறும் நாளன்று காலை 8.30 மணிக்குள் விளையாட்டு அரங்கத்துக்கு வந்து பெயரினை பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com