கருங்கல் பகுதியில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் வட்டாரத்தில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் வட்டாரத்தில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

கருங்கல் வட்டாரத்தில் பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, ஆலஞ்சி, மிடாலக்காடு, காட்டுக்கடை, காக்கவிளை, கருமாவிளை, பாலூா், மிடாலம், தெருவுக்கடை, எட்டணி, முள்ளங்கனாவிளை, நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

4 மணி நேரத்துக்கு நீடித்த மழையால் கருங்கல் பகுதிகளில் உள்ள குளங்கள், நீா் நிலைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளன. சாலைகளிலும் தாழ்வானப் பகுதியிலும் மழை நீா் தேங்கி காணப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com