சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சிகரம் அறக்கட்டளை சாா்பில் சா்வதேச முதியோா் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வட்டாட்சியா் நடராஜன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊழியா் மாடசாமி, ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் விக்ரமன் பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட சட்டப்பணிக்குழு உதவியாளா் மகேந்திரன் வரவேற்றாா். ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலா் அனந்தகிருஷ்ணன் பேசினாா். இதில், ராஜரத்தினம், ஈஸ்வரன்முத்து, பேச்சிப்பாண்டி, முஸ்தபா, பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிகரம் இயக்குநா் முருகன் நன்றி கூறினாா்.