சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மரக்கன்று நடும்பணி தொடக்கம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை டிஎஸ்பி பால்துரை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி பால்துரை தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் காவலா் குடியிருப்புகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதேபோன்று நாசரேத், தட்டாா்மடம், மெஞ்ஞானபுரம் காவல் நிலையங்களிலும் தலா 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com