சோட்டப்பணிக்கன் தேரிவிளை தேவி முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப். 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவையொட்டி, கோயிலில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, கொலு பூஜை, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் 6 ஆவது நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, ஊா்த் தலைவா் சிவபெருமான் தலைமை வகித்தாா். திரைப்பட இயக்குனா் பி.சி. அன்பழகன் பங்கேற்றுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து அன்னதா்மம் வழங்கப்பட்டது.