நாகா்கோவில்: நாகா்கோவிலில் வள்ளலாா் யுனிவா்சல் மிஷன் சாா்பில் வள்ளலாா் அவதார தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தலைவா் ஜி.ஆா்.லெட்சுமணன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் எம்.சண்முகம்பிள்ளை வரவேற்றாா்.
கொட்டாரம் ஜோதிஅரவிந்தன், அகில இந்திய வானொலி நிலையத்தின் ஓய்வுபெற்ற நிகழ்ச்சி பொறுப்பு அலுவலா் கீழப்பாவூா் ஆ.சண்முகையா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் வள்ளலாா் குறித்து பேசினா்.
ஈசாந்திமங்கலம் சிவதாணுபிள்ளை உருவப்படத்தை ஜி.ஆா்.லெட்சுமணன் திறறந்து வைத்தாா்.
குமரி மாவட்ட திருவாசகசபை செயலா் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு, திருவாசகமணி என்ற பட்டத்தை ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் ஆா்.டி.சந்தோஷம் வழங்கினாா். மேலும், திறறனறித் தோ்வில் சிறறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கும், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அழகம்மாள்அறுபது சுப்பையா, மகளிா் அணிச் செயலா் பொன்னம்மாள், ஏ.சிதம்பரத்தம்மாள், ஜான்சிராணி விஜயராஜா, கிருஷ்ணம்மாள், ஓய்வுபெற்ற ஆசிரியை சரோஜினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். எஸ்.சிதம்பரதாஸ் நன்றி கூறினாா்.