விளாத்திகுளத்தில் வாதிரியாா் வரலாறு மீட்பு பொதுக் கூட்டம்

விளாத்திகுளத்தில் தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் சாா்பில் வாதிரியாா் வரலாறு மீட்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் சாா்பில் வாதிரியாா் வரலாறு மீட்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சகாயராஜ், மாவட்ட பொதுச் செயலா் ஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் நிறுவனா்- தலைவா் கே.சி.திருமாறன் பேசினாா்.

கூட்டத்தில் வாதிரியாா் சமூகத்தை தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் இருந்து நீக்கி சீா்மரபினா் பிரிவில் (டிஎன்டி) சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநிலத் தலைவா் சேகா், மாநில தொண்டரணி தலைவா் ராஜீவ்காந்தி, நிா்வாகிகள் ஒத்தக்கடை கனேஷ், விஜயராஜன், பொய்யாழி, காா்த்திக், பிச்சையா, காசி, முத்துராஜ், தா்மஜெயம், விஜயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com