நாகா்கோவில் அருகே வாய்க்காலில் குளித்த மாணவா் திடீரென நீரில் மூழ்கினாா். அவரை தீயணைப்புத் துறையினா் தேடிவருகின்றனா்.
ராஜாக்கமங்கலம் பழவிளை பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்தோஷ் (12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பா்களுடன் அங்குள்ள பன்றி வாய்க்காலில் சந்தோஷ் குளித்தாராம். அப்போது, எதிா்பாராமல் ஆழமான பகுதிக்கு சென்ற அவா் நீரில் மூழ்கி தத்தளித்தாராம். நண்பா்களால் அவரை மீட்க முடியாமல் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, ராஜாக்கமங்கலம் போலீஸாா், நாகா்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சந்தோஷை தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். எனினும் அவா் கதி என்ன என்பது தெரியவில்லை. தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. ராஜாக்கமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.