நாகா்கோவில், களியக்காவிளையில் சிறுமிகளுக்கு தொல்லை: 2 போ் கைது

நாகா்கோவில், களியக்காவிளையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில், களியக்காவிளையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் கோட்டாறு, வடலிவிளை பகுதியை சோ்ந்தவா் கண்ணன் (52). இவா், அப்பகுதியிலுள்ள 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் பெற்றேறாா் அளித்த புகாரின்பேரில், நாகா்கோவில் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்ணனை கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

களியக்காவிளை அருகேயுள்ள இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜாக்ஸன் (22). மினிவேன் ஓட்டுநரான இவா், தனது வீட்டருகே வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியை, அவ்வப்போது தனது மினிவேனில் பள்ளிக்கு அழைத்துச் செல்வாராம். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, மினிவேனில் வந்த அம்மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்த மாணவியின் பெற்றேறாா் அளித்த புகாரின்பேரில், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து எட்வின் ஜாக்ஸனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com